Friday, November 18, 2011

நல்ல குடும்பம் பல்கலைக் கழகமாக.


நம் வீட்டில மட்டுமல்ல, நம்ம நாட்டில மட்டுமல்ல, உலகில் எங்கு பார்த்தாலும் வீட்டுக்கு வீடு நுழைவாயில் தான். 'நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்' என்பது வெறும் பேச்சுத்தான். வீட்டுக்கு வீடு சென்று பார்த்தால் தான் தெரியும், 'குடும்பம் ஒரு குழப்பக் கழகம்' என்று... குழப்பக் கழகத்தைப் பல்கலைக் கழகமாக்க பின்வரும் வழிகளை கையாண்டு பார்க்கவும்.
1-ஒருவர் விருப்பை ஒருவர் ஏற்றல்.
2-ஒருவர் சொல்லை ஒருவர் கேட்டல்.
3-ஒருவர் செயலுக்கு ஒருவர் உதவணும்.
4-ஒருவர் கருத்தை ஒருவர் பொருட்படுத்தணும்.
5-குடும்பம் என்ற வட்டத்திற்கு உள்ளேயே இருக்கணும்.
6-அண்டை அயலை அணைக்க வேண்டும்.
7-நேற்றைய வழிகாட்டலை மீறாமல் இன்றே நிறைவாய் வாழ்தல்.
8-நாளை என்ற நாளை உள்ளத்தில் இருத்தி நாளைக்கு வாழத் தேவையானதை சேமிக்கணும்.
9-சுகம் காண வேண்டிய இன்றைய வாழ்வை, நாளைக்கு வாழலாம் என்று தள்ளிப் போடாதே!
10-எதற்கும் "நேரமில்லை" என்று பதில் கூறாமல், 24 மணி நேரத்தையும் திட்டமிட்டுப் பாவிக்கணும்.
இந்தப் பத்தை விட, இன்னும் பல எழுதலாம். இந்தப் பத்தையும் உங்கள் சொத்தாக நினைத்துப் பேணினால் கூட, குடும்பம் ஒரு குழப்பக் கழகம் ஆகாமல் பல்கலைக் கழகமாகப் பேண முடியுமே! வாழ்க்கை என்பது நல்ல குடும்பத்தில் தான் அமைகிறது. நல்ல குடும்பம் அமைய மேற்காணும் பத்தும் உங்களுக்கு வழிகாட்டுமே!

No comments:

Post a Comment